மயிலாடுதுறை, ஜூலை 19 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங் காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிரா மத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சி ஸ்ட் கட்சி தலைமையில் 14 ஆவது நாளான வெள்ளியன்றும் போராட்டம் தொடர்ந்தது.
குடியேறிய இடத்திற்கு வெண்மணி நகர் என பெயர்சூட்டி இரவு, பகலாக நடந்து வரு கிற போராட்டத்தில், அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், கட்சி யின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில துணைச் செயலாளர் நாகை எம்.முரு கையன், மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் கே.கேசவன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் காபிரியேல், டிஜி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.